செவ்வாய், 4 ஏப்ரல், 2017

பாஜகவை வீழ்த்த பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் அழைப்பு April 04, 2017

பாஜகவை வீழ்த்த பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் அழைப்பு


2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த மெகா கூட்டணியை அமைக்க வேண்டும் என பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் அழைப்புவிடுத்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ்குமார், பாஜக அல்லாத கட்சிகளை ஒன்றிணைத்து தேசிய அளவில் மெகா கூட்டணியை அமைக்கும் பொறுப்பு காங்கிரசுக்கு உள்ளது என்றார். பீகாரில் அமைந்தது போன்ற மெகா கூட்டணி உத்தரபிரதேசத்தில் அமைந்திருந்தால் அம்மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் மாறியிருக்கும் என்றும் தனது ஆதங்கத்தை நிதிஷ்குமார் வெளிப்படுத்தியுள்ளார்.

உத்தரபிரதேசத் சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி காங்கிரஸ் கூட்டணியில் பகுஜன் சமாஜ் கட்சியையும் இணைத்திருந்தால் அந்த கூட்டணிக்கு வெற்றி கிடைத்திருக்கும் என்றும்   நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.