புதன், 5 ஏப்ரல், 2017

நான் எப்ப சார் உங்க வீட்டுக்கு வந்தேன்” ராஜாவிற்கு போன் போட்டு கேட்ட அய்யா கண்ணு!!

நான் எப்ப சார் உங்க வீட்டுக்கு வந்தேன்”  ராஜாவிற்கு போன் போட்டு கேட்ட அய்யா கண்ணு!! – 
ஹெச் ராஜா மற்றும் பாஜகவினர் தன் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்து அய்யா கண்ணு அவர்கள் இன்று ஒரு காணொளி வெளியிட்டுள்ளார்.
ஹெச் ராஜாவிற்கே நானே போன் போட்டேன் , ”எப்ப சார் நான் உங்க வீட்ல வந்து இருந்தேன் , நான் என்ன ஃபிராடு தனம் சார் செய்தேன் எனக் கேட்டேன் அதற்கு ராஜா சாரி அது தெரியாம நடந்து போச்சு நான் வேனா வருத்தம் தெரிவித்து அறிக்கை விடுகின்றேன் என என்னிடம் கூறினார் என அய்யா கண்ணு காணொளியில் கூறியுள்ளார்கள்.
மேலும் ஹெச் ராஜாவிற்கு பகிரங்க சாவல் ஒன்றும் விடுத்துள்ளார் , ஹெச் ராஜா கூறியதை நிரூபித்தால் நான் தூக்கில் தொங்குகின்றேன், நிரூபிக்க முடியவில்லை என்றால் ஹெச் ராஜா தூக்கில் தொங்குவாரா என அய்யா கண்ணு சவால் விட்டுள்ளார்.

Related Posts: