காயம் அவர்களின் வழிகாட்டுதழில் இயங்கும் மக்கள் பாதை அமைப்பின் 2 வது ஆண்டு துவக்க நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. நீண்ட நாட்களுக்கு பிறகு பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சகாயம் அவர்கள் பேசினார், அவரது பேச்சு இளைஞர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது.
தான் சமீப காலமாக பேசாமல் இருந்ததற்கு என்ன காரணம் என்பதை கூறிய சகாயம், போக்கிரி தன்னை புனிதனாக காட்டிக் கொள்கின்றான், நல்லவனாக நடிப்பவன் ஆட்சி நடத்துகின்றான் எனப் பேசியதும் இளைஞர்களின் கை தட்டல்கள் அங்கே பறந்தது!
தற்போது தான் இந்த சமூகத்திற்கு 10 சதவிகி கோபம் வந்துள்ளது , இந்த கோபம் என்றைக்கு 100 சதவிகிதம் ஆகின்றதோ அன்றைக்கு நாமெல்லாம் நினைத்தது நடக்கும் என சகாயம் அவர்கள் குறிப்பிட்டார்கள்.