
இந்த ஆண்டு இதுவரை நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சலுக்கு 600 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, மாநிலங்களவையில் எழுத்துப் பூர்வமாக சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா அளித்த பதிலில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 1 முதல், ஜூலை 9ம் தேதி வரை நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சலால் 12 ஆயிரத்து 460 பேர் பாதிக்கப்பட்டதாகவும், இவர்களில் 600 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 284 பேரும், குஜராத்தில் 75 பேரும், கேரளாவில் 63 பேரும் உயிரிழந்துள்ளதாக ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார். தெலங்கானாவில் 17 பேரும், தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் தலா 15 பேரும் பன்றிக் காய்ச்சலால் பலியாகி இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டைக் காட்டிலும், இந்த ஆண்டு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ள ஜெ.பி. நட்டா, நிலைமையை மத்திய சுகாதாரத்துறை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகக் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக, மாநிலங்களவையில் எழுத்துப் பூர்வமாக சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா அளித்த பதிலில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 1 முதல், ஜூலை 9ம் தேதி வரை நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சலால் 12 ஆயிரத்து 460 பேர் பாதிக்கப்பட்டதாகவும், இவர்களில் 600 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 284 பேரும், குஜராத்தில் 75 பேரும், கேரளாவில் 63 பேரும் உயிரிழந்துள்ளதாக ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார். தெலங்கானாவில் 17 பேரும், தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் தலா 15 பேரும் பன்றிக் காய்ச்சலால் பலியாகி இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டைக் காட்டிலும், இந்த ஆண்டு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ள ஜெ.பி. நட்டா, நிலைமையை மத்திய சுகாதாரத்துறை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகக் கூறியுள்ளார்.