திங்கள், 24 ஜூலை, 2017

​ஒரே நாடு, ஆனால் வெவ்வேறு நேரக்கணக்கு? - மத்திய அரசு ஆலோசனை July 23, 2017

​ஒரே நாடு, ஆனால் வெவ்வேறு நேரக்கணக்கு? - மத்திய அரசு ஆலோசனை



சூரியன் உதிப்பதைப் பொறுத்து இந்தியாவில் நேர அளவுகளை நிர்மாணிக்க மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக தெரியவந்துள்ளது.

தற்போது, இந்திய நேரக் கணக்கு என்பது லண்டனில் உள்ள க்ரீன்விச்சில் உள்ள நேரத்தைவிட ஐந்தரை மணிநேரம் பின் தங்கியது. இந்தியா முழுவதும் தற்போது ஒரே நேரக் கணக்கு தான் உள்ளது. இதை மாற்றி, சூரியன் உதிப்பதை பொறுத்து வெவ்வேறு பிரதேசத்திற்கு வெவ்வேறு நேரக்கணக்கைக் கொண்டு வர மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக தெரியவந்துள்ளது.

கடந்த புதன்கிழமை அன்று நடந்த நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய பிஜூ ஜனதா தள எம்.பி மக்தாப் இதுதொடர்பான கேள்வியை கேட்டிருக்கிறார். இதற்கு அளிக்கப்பட்ட பதிலிலேயே இந்தியாவில் உள்ள வெவ்வேறு மாநிலங்களில், சூரியன் உதிப்பைதைப் பொறுத்து காலை, இரவு, பகல் ஆகியவற்றிற்கு ஏற்ப அலுவலக வேலை நேரம் உட்பட அனைத்திற்கும் நேரம் தொடங்கும் கணக்கை மாற்றுவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ளது.

குறிப்பாக, அருணாச்சலப் பிரதேசத்தில் தற்போது இருக்கும் இந்திய நேரத்தின் படி, சூரியன் 4 மணிக்கே உதித்துவிடுகிறது. ஆனால், அலுவலகம் 10 மணிக்கு தான் தொடங்குகிறது. இந்த இந்திய நேரத்தை மாற்றி அமைப்பதன் மூலம் உற்பத்தி நேரம் மற்றும் மின்சாரம் ஆகையவற்றை சேமிக்க முடியும்.

இதன்படி, வடகிழக்கு மாநிலங்களுக்கு மட்டும் தனியான நேரக்கணக்கு கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் அருணாச்சலப்பிரதேசத்தின் பாஜக முதல்வர் பீம கண்டு இதுதொடர்பாக வலியுறுத்தியுள்ளார்.

இப்படி இந்திய நேரத்தை மாற்றியமைப்பதன் மூலம், 270 கோடி வாட் மின்சாரம் சேமிக்கப்படும் என்றும், இதன் மூலம் சுமார் 94 ஆயிரம் கோடி ரூபாய் செலவு மிச்சமாகும் என்றும் கூறப்படுகிறது.
அமெரிக்கா உட்பட உலகின் பல நாடுகளில் இத்தகைய வித்யாசமான நேரக்கணக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.