Home »
» “கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், 16ந் தேதி முதல் வேலைநிறுத்தம்!” : மின் ஊழியர் சங்கம் February 13, 2018
மின் ஊழியர்கள் கோரிக்கை தொடர்பாக 15ம் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை என்றால் திட்டமிட்டபடி 16ம் தேதி வேலை நிறுத்தம் நடைபெறும் என மின் ஊழியர்கள் சங்கத்தினர் எச்சரித்துள்ளனர். ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊதிய உயர்வு உள்ளிட்டவை அளிக்கப்படாததால், சுமார் 88,000 நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிப்படைந்துள்ளனர். இது தொடர்பாக கடந்த மாதம் 22ம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததை அடுத்து நேற்று மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நலத்துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.பேச்சுவார்த்தையின் இடையே அதிகாரிகள் திடீரென வெளியேறியதாக அதில் கலந்துகொண்ட மின்வாரிய தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். இதனால் பேச்சுவார்த்தை முடிவு எட்டப்படாமல் பாதியிலேயே நிறைவடைந்தது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மின் ஊழியர் சங்கத்தினர், 15ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகவும் அதிலும் முடிவு எட்டப்படவில்லை என்றால் திட்டமிட்டபடி 16ம் தேதி வேலை நிறுத்தம் நடைபெறும் என்றும் தெரிவித்தனர்.
Related Posts:
கரையை கடந்த டாணா புயல்: மேற்கு வங்கம், ஒடிசாவில் பாதிப்பு நிலவரம் என்ன? வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் டாணா புயலாக உருவெடுத்த நிலையில், இந்த புயல், மேற்குவங்கத்தின் பிதர்கணிகா, ஒடிசாவின் தாமரா இடையே தீ… Read More
ஒடிசா, மேற்கு வங்கத்தை தாக்கும் டானா: புயல் என்றால் என்ன, அதன் வகைகள் என்ன? இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று புதன்கிழமை (அக்டோபர் 23) டானா புயல் தீவிர புயலாக வலுவடைந்தது எனக் கூறியது, இந்த புயல் இன்று வியாழன் இரவு … Read More
ஒன்றும் புரியவில்லை'... இந்தியில் கடிதம் அனுப்பிய மத்திய அமைச்சருக்கு தமிழில் பதிலளித்த தமிழக எம்.பி 25 10 24தமிழகத்தைச் சேர்ந்த தி.மு.க எம்.பி எம்.எம். அப்துல்லா மத்திய ரயில்வே இணை அமைச்சர் ரவ்னீத் சிங்கின் இந்தி கடிதத்திற்கு வெள்ளிக்… Read More
15 நிமிடங்களில் 45 மி.மீ., மழை; மதுரையை மூழ்கடித்த வடகிழக்கு பருவமழை மதுரை நகரில் 15 நிமிடங்களில் 45 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. மதுரை பகுதியில் சில நாட்களாக வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. காலை நேரத்தி… Read More
ஒப்பந்தம் கூறுவது என்ன? வல்லுநர்கள் விளக்கம் இந்தியா மற்றும் சீனா இடையே தொடர்ந்து நடைபெற்று வந்த பேச்சுவார்த்தையின் முடிவில், எல்.ஏ.சி பகுதியில் ரோந்து பணிகள் மேற்கொள்வது தொடர்பான ஒப்பந்தம்… Read More