Home »
» லட்சத்தீவில் கரை ஒதுங்கிய தமிழக மீனவர்கள் கண்ணீருடன் கோரிக்கை! March 16, 2018
அரபிக்கடலில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் லட்சத்தீவில் கரை ஒதுங்கிய கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 500 மீனவர்கள் தங்களை மீட்குமாறு கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.புயல் எச்சரிக்கையால் லட்சத்தீவில் கரை ஒதுங்கிய கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 500 பேர் 4 நாட்களாக உணவின்றி தவித்து வருவது அவர்களது குடும்பத்தினரிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.வானிலை ஆய்வுமையத்தின் எச்சரிக்கையை எடுத்து, 41 படகுகளில் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள், லட்சத்தீவில் பத்திரமாக கரை சேர்ந்தனர். உரிய அனுமதியின்றி லட்சத்தீவில் கரை சேர்ந்தததால், அங்குள்ள கடற்படை அதிகாரிகள், மீனவர்களின் அடையாள அட்டை, சான்றிதழ்களை பறித்துள்ளனர். இதனால் ஊருக்கு திரும்ப முடியாமலும், உணவு மற்றும் நீரின்றியும் மீனவர்கள் தவித்து வருகின்றனர். மத்திய அரசு தொடர்பு கொண்டால் மட்டுமே விடுவிப்போம் என லட்சத்தீவு அதிகாரிகள் கூறுவதாக மீனவர்கள் வேதனையுடன் கூறினர். நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியை தொடர்பு கொண்ட மீனவர்கள், தங்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்குமாறு கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Posts:
டெங்கு காய்ச்சல் பாதிப்பில் முதலிடம் பிடித்த தூத்துக்குடி மாவட்டம்! October 05, 2017
தமிழகம் முழுவதும் கடந்த மாதம் வரை 9,575 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 1,116 பேரும… Read More
பிரதமர் நரேந்திர மோடி மிகப்பெரிய தீவிரவாதி - பாகிஸ்தான் அமைச்சர் கவாஜா October 04, 2017
பிரதமர் நரேந்திரமோடி மிகப்பெரிய தீவிரவாதி என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் கவாஜா ஆசிப் விமர்சித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசி… Read More
லாரிகள் வேலைநிறுத்தம் - 40 லட்சம் லாரிகள் இயங்காது என அறிவிப்பு! October 05, 2017
புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி, வரும் 9,10 ம் தேதிகளில் நாடு முழுவதும் 40 லட்சம் லாரிகள் இயங்காது என லாரி உரிமையாளர் சம்ம… Read More
பண மதிப்பிழப்பு நடவடிக்கை தற்கொலைக்கு ஒப்பானது!” : அருண் ஷோரி October 04, 2017
பண மதிப்பிழப்பு நடவடிக்கை எப்போதும் இல்லாத அளவிலான மிகப்பெரிய பண மோசடி திட்டம் என முன்னாள் மத்திய அமைச்சரும் பொருளாதார வல்லுநருமான அரு… Read More
கிணற்றைக் காணவில்லை என புகார்! October 05, 2017
முகப்பு > தமிழகம்
கிணற்றைக் காணவில்லை என புகார்!
October 05, 2017
SHARE
TWEET
SHARE
1659
VIEWS
… Read More