உலகிலேயே அதிக அளவில் பழங்களை உற்பத்தி செய்வதில் 2-வது இடத்தில் இந்தியா!
புதுடெல்லி,
உலக அளவில் பழங்களை அதிகமாக உற்பத்தி செய்யும் நாடுகளில் இரண்டாவது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. சீனா முதலிடத்தில் உள்ளது. விவசாயத்தில் காய்கறிகளை விட பழங்களை இந்தியா அதிக அளவில் உற்பத்தி செய்கிறது. 2015-ம் ஆண்டிற்கான விவசாய புள்ளிவிபரம் அடங்கிய ‘horticultural statistics at a glance 2015′ என்ற கையேடு ஒன்றை மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, 2014-15-ம் ஆண்டில் பழங்களிலேயே அதிகமாக இந்தியாவின் திராட்சைப்பழ ஏற்றுமதி ரூ.1,086 கோடி அளவில் 107.3 ஆயிரம் டன்களை எட்டியுள்ளது. மாம்பழம் மற்றும் வாழைப்பழ ஏற்றுமதியும் உச்சத்தை தொட்டுள்ளன.
அதிக அளவில் பழங்களை உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல் பின்வருமாறு:-
சீனா – (154.364 மில்லியன் டன்)
இந்தியா – (82.631 மில்லியன் டன்)
பிரேசில் – (37.774 மில்லியன் டன்)
அமெரிக்கா – (26.986 மில்லியன் டன்)
ஸ்பெயின் – (17.699 மில்லியன் டன்)
மெக்ஸிகோ – (17.553 மில்லியன் டன்)
இத்தாலி – (16.371 மில்லியன் டன்)
இந்தோனேசியா – (16.003மில்லியன் டன்)