
அல்காயிதா'வின் பெயரால் அடுத்த நாடகம் அரங்கேற்றம்:
ஒரே வருடத்தில் இந்திய ராணுவத்தையே நிர்மூலமாக்கும் அளவுக்கு பாகிஸ்தானில் பயிற்சி பெற்றுவிட்டாராம் 'அப்துஸ் சமீ' ..!
டெல்லி சிறப்பு போலீசின் 'அலப்பரை' தாங்கமுடியவில்லை..!!
ஜார்கண்ட் மாநிலத்தின் ஜம்ஷீத்பூரை சேர்ந்த 32 வயது 'அப்துஸ் சமீ' என்ற இளைஞரை ஹரியானா மாநிலத்தின் 'மேவாத்' பகுதியில் 'நூஹ்' என்ற இடத்தில் வைத்து சுற்றி வளைத்து கைது செய்ததாக விறுவிறுப்பான நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார், டெல்லி சிறப்பு போலீஸ் கமிஷனர் அரவிந்த் தீப்.
2014-ம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு சென்ற சமீ, ஒரே ஆண்டில் நவீன ஆயுதங்களை கையாளும் அளவுக்கு பாரதூரமான பயிற்சிகள் பெற்று இந்திய ராணுவத்தையே நிலைகுலைய செய்யும் அளவுக்கு தீவிரவாத பயிற்சி பெற்றுள்ளதாக நீதிமன்றத்தில் கூறியுள்ளார், டெல்லி கமிஷனர்.
வழக்கம் போல போலீஸ் சொல்வதை அப்படியே நம்பி, பிப்ரவரி 1-ந்தேதி வரை போலீஸ் காவலில் அனுப்பிவிட்டது நீதிமன்றம்.