கதிராமங்கலம் கலவரம் தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள, மீத்தேன் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரின் காவல் வரும் 28-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 30ம் தேதி கதிராமங்கலத்தில் கல்வீச்சு மோதல் என கலவரம் வெடித்தது. இச்சம்பவம் தொடர்பாக மீத்தேன் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யபட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் இன்று கும்பகோணத்தில் உள்ள இரண்டாவது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து, அவர்களின் காவலை வரும் 28ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி சரவணபவன் உத்தரவிட்டார்.
கடந்த மாதம் 30ம் தேதி கதிராமங்கலத்தில் கல்வீச்சு மோதல் என கலவரம் வெடித்தது. இச்சம்பவம் தொடர்பாக மீத்தேன் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யபட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் இன்று கும்பகோணத்தில் உள்ள இரண்டாவது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து, அவர்களின் காவலை வரும் 28ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி சரவணபவன் உத்தரவிட்டார்.