வியாழன், 15 மார்ச், 2018

எண்ணூர் துறைமுகத்தில் ஏற்பட்ட எண்ணெய் கசிவுக்கு இழப்பீடு வழங்க உத்தரவு! March 15, 2018

Image


எண்ணெய் கசிவால் ஏற்பட்ட பாதிப்புக்கு 141 கோடி ரூபாய் இழப்பீடு தொகையை வழங்க ஒப்புக் கொண்டுள்ள கப்பல் நிறுவனங்கள், அதை 14 நாட்களில் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னை அருகே கடந்தாண்டு ஜனவரி மாதம் இரு கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளாயின. இதனால் கப்பலில் இருந்த எண்ணெய் கசிந்து, கடலில் மாசு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து உரிய இழப்பீடு கோரி மீனவர்கள் போராட்டம் நடத்தினர். இதற்கிடையே சென்னை காமராஜர் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பல்களை விடுவிக்க கோரி சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசிடம் நடத்தப்பட்ட சமரச பேச்சுவார்த்தையில் 141 கோடி ரூபாயை இழப்பீடாக வழங்க ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளதாக கப்பல் நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் 14 நாட்களில் 141 கோடி ரூபாயை தமிழக அரசுக்கு வழங்க உத்தரவிட்டனர்.

Related Posts:

  • நாள் தோறும் நாம் ஊழைத்து தேடி பெற்றுச் செலவு செய்யும் இந்த ரூபாய் நோட்டுக்களுக்கும், நாணயங்களுக்கும் உள்ள மதிப்பை நாம் அறிவோம். ஆனால், இந்திய ரூபாயி… Read More
  • Hadis : பகடைக்காய் ஆட்டம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பகடைக்காய் ஆட்டம் (நர்தஷீர்) விளையாடியவர், தமது கையைப் பன்றி இறைச்சியிலும் இரத்தத்திலும் தோய்த்தவரைப் போன்றவர் ஆவார்… Read More
  • அணு உலை கசிவு: குஜராத் அணுமின் நிலையம் தற்காலிக மூடல் குஜராத்தின் காக்ரபார் அணுமின் நிலையத்தின் முதல் அணுஉலை இயந்திரக் கோளாறு காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது‌. முதல் அணுஉலையில் உள்ள குளிர்விப்பானில… Read More
  • முதுகு வலி... தப்பிக்க என்ன வழி? ''இன்றைய வாழ்க்கைச் சூழலில், முதுகு இருக்கும் அனைவருக்குமே முதுகு வலியும் இருக்கிறது! உடம்பில் உள்ள அனைத்துத் தசைகளின் அழுத்தமும் ஒருசேர முதுகுத… Read More
  • வெங்காயப் பூவில் மறைந்து இருக்கும் மருத்துவக் குணங்கள் சுவைக்காக மட்டுமின்றி வெங்காயம் வியக்கத்தக்க மருத்துவ ரீதியாகவும் பயன்படுகிறது. நன்கு வளர்ந்த வெங்காயம் சமையலில் எவ்வாறு உதவுகிறதோ அதேபோல வெங்கா… Read More