செவ்வாய், 10 மே, 2022

காஷ்மீரி பத்திரிகை புகைப்படக் கலைஞர் சன்னா இர்ஷத் மேட்டூவுக்கு புலிட்சர் விருது

 

காஷ்மீரி பத்திரிகை புகைப்படக் கலைஞர் சன்னா இர்ஷத் மேட்டூ ஃபீச்சர் போட்டோகிராபி 2022 பிரிவில் புலிட்சர் விருதை வென்றுள்ளார்.

கடந்த 1912ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பத்திரிகை, இணைய ஊடகம், இலக்கியம், இசையமைப்பு, நாடகம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்குகிறவர்களுக்காக கொலம்பியா பல்கலைக்கழகம் மூலம், அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் பத்திரிகைகளில் பணிபுரிபவர்களுக்கு அமெரிக்க பத்திரிகையாளர் ஜோசப் புலிட்சர் பெயரில் இவ்விருது வழங்கப்படுகிறது.

கடந்த ஆண்டு காஷ்மீரி புகைப்படக் கலைஞர்களான தர்யாஷின், முத்தார்கான், சன்னி ஆனந்த் ஆகிய 3 பேர் புலிட்சர் விருதைப் பெற்றனர்.

தற்போது இவ்விருதைப் பெற்றுள்ள சன்னா இர்ஷத் மேட்டூ பல்வேறு சர்வதேச பத்திரிகைகளில் பணியாற்றியுள்ளார். காஷ்மீரி வல்லா பத்திரிகையில் பணியாற்றி வந்த இவர் தற்போது ஃப்ரீலான்ஸிங் செய்து வருகிறார்.

இந்தியாவில் கொரோனா நெருக்கடியைப் பற்றி கவரேஜ் செய்ததற்காக மறைந்த டேனிஷ் சித்திக், அட்னான் அபிடி, அமித் தேவ் உள்ளிட்ட குழுவுடன் சேர்ந்து மேட்டூ இவ்விருதை வென்றுள்ளார்.

இதுகுறித்து, புலிட்சர் தனது ட்விட்டரில் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில்,  அட்னான் அபிடி, மேட்டூ சன்னா, அமித் தேவ், மறைந்த டேனிஷ் சித்திக்கின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளது.

தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியது குறித்து செய்தி சேகரிக்கச் சென்றபோது சித்திக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

source https://news7tamil.live/kashmiri-photojorunalist-sanna-irshad-mattoo-wins-pulitzer-prize.html