திங்கள், 23 ஜனவரி, 2017

பீட்டாவின் தலைமையகத்தையே முற்றுகையிட்ட தமிழர்கள் – வெர்ஜீனியாவில் எழுச்சியோயுடன் நடைபெற்ற போராட்டம்!



ஜல்லிக்கட்டின் உச்சகட்டப் போராட்டமாய் அமெரிககாவில் உள்ள பீட்டா தலைமையகத்தையே தமிழர்கள் இன்று முற்றுகையிட்டுள்ளனர்.
வெர்ஜீனியாவில் உள்ள பீட்டா தலைமையகத்தில் அமெரிக்காவில் உள்ள தமிழர்கள் ஒன்றினைணந்து இன்று முற்றுகை நடத்தினர். அங்கே பீட்டாவே இந்தியாவை விட்டு வெளியோ என முழக்கங்கள் எழுப்பினர். மேலும் போராட்டத்தில் தமிழர்களுக்கு ஆதரவாக பீட்டாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கர்களும் கலந்து கொண்டதாக போராட்டத்தில் கலந்து கொண்ட தோழர் விஜய் குமார் நம்மிடம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. போராட்டத்தில் 600 க்கும் மேற்பட்ட அமெரிக்க வாழ் தமிழர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
source: kaalaimalar