கேரளாவில் மாணவிகளின் உள்ளாடைகளை அகற்றிய பின்னரே நீட் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டதால் மாணவிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.
நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்கள் பேனா, பென்சில், ரப்பர், வெற்று அல்லது எழுதிய காகிதங்கள், புத்தகம், பேனா பவுச், லாக் டேபிள், எலக்ட்ரானிக் பென், கால்குலேட்டர், செல்போன், பேஜர், இயர்போன், தொப்பி, கைப்பை, தோள்பை ஆகிய எதையும் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது.
சோதனை என்ற பெயரில் தேர்வு எழுதும் மையங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் கடும் மனா உளைச்சலை மாணவர்களுக்கு கொடுத்தது.
இந்த சோதனையால் மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களுக்கும் சோதனை செய்பவர்களுக்கும் தேர்வு எழுதும் மையங்களில் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது.
மேலும் மாணவகியால் தாங்கள் அணிந்திருந்த தோடு, ஹேர்ப்பின், ஆகியவற்றை அகற்றிய பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
மாணவர்கள் அணிந்திருந்த முழுக்கை சட்டை அரை கை சட்டையாக்கப்பட்டது.
இதன் உச்சமாக கேரளாவில் கண்ணனூரில் உள்ளாடைகளை அகற்றிய பின்னரே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இதனால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.
தேர்வு எழுதும் அறைக்கு சென்ற மாணவிகள், திரும்ப வந்து உள்ளாடைகளை அளித்து விட்டு சென்றதாக மாணவிகள் கூறியது நெஞ்சை உலுக்கும் செயலாக இருந்தது.
உள்ளாடைகளை அகற்றிவிட்டு தேர்வு எழுதியதால் பெற்றோர்களும், மாணவர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
சிலர் எனக்கு இந்த தேர்வே வேண்டாம் என்று தேர்வை புறக்கணித்தனர்