புதன், 7 பிப்ரவரி, 2018

அரசு பள்ளியின் வாயிலில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கோவில் அகற்றம்! February 7, 2018

Image

சிவகங்கையில் மத்திய அரசு பள்ளியின் வாயிலில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கோவிலை வருவாய்த்துறையினர் அகற்றினர்.

சிவகங்கை அல்லூர் செல்லும் வழியில் மத்திய அரசிற்கு சொந்தமான கேந்த்ரிய வித்யாலயா பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் வாயிலை ஒட்டி சாலை ஓரத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக விநாயகர் கோவில் சமீப காலத்தில் கட்டப்பட்டது.

இந்நிலையில் இந்த கோவிலால் பள்ளிக்கு வரும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுவதாக பள்ளி நிர்வாகத்தின் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில், பள்ளியின் வாயிலில் இருந்த கோவிலை வருவாய்த்துறையினர் இன்று அகற்றினர்.

2 ஜேசிபி உதவியுடன் கோவில் இடிக்கப்பட்ட நிலையில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்படாமல் தவிர்க்க ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். 

Related Posts:

  • Quran அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்! (அவர்கள… Read More
  • Quran அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்! (அவர்கள… Read More
  • பெட்ரோல், டீசல் விலை உயர்வு பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் 26 காசுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது… Read More
  • குண்டுவைத்து இஸ்லாமியர்களின் தலையில் பலிகளை சுமத்தினார்கள் RSS இந்துத்துவவாதிகள் 7 இடங்களில் குண்டுவைத்து இஸ்லாமியர்களின் தலையில் பலிகளை சுமத்தினார்கள் ஆதாரத்துடன் கூறுகிறார் சகோதரி சுந்தரவள்ளி. … Read More
  • சட்டம் குற்ற விசாரணை முறை சட்டம் 1973-ன் சட்டப்பிரிவு 310, "(1) ஒரு பரிசீலணை, விசாரணை அல்லது நடவடிக்கையி எந்தக் கட்டத்திலும், தரப்பினர்களுக்கு முறைப்படி அ… Read More