புதன், 5 பிப்ரவரி, 2020

11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் சட்டப்பேரவை செயலாளர் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.-க்களை தகுதி நீக்கக்கோரும் வழக்கில், சட்டப்பேரவை செயலாளர் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
இது தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி, எம்.எல்.ஏ.-க்களை தகுதி நீக்கம் செய்யக் கோரும் நோட்டீஸ் மீது சபாநாயகர் முடிவெடுக்க நீதிமன்றம் உத்தரவிட முடியாது என கூறினார். 
photo
தி.மு.க. தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், 11 பேரை தகுதி நீக்கம் செய்ய கொடுத்த நோட்டீஸ் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினார். இதையடுத்து, சபாநாயகரிடம் கொடுக்கப்பட்ட நோட்டீஸ் மீது அவர் எப்போது நடவடிக்கை எடுக்கப் போகிறார் என தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணனிடம் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.  
photo
இதற்கு பதில் அளிக்க 2 வாரம் கால அவகாசம் வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இதையடுத்து, வழக்கு விசாரணையை வரும் 14ம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதிகள், சபாநாயகர் எப்போது நடவடிக்கை எடுக்க போகிறார் என்பது தொடர்பாக பதிலளிக்க சட்டப்பேரவை செயலாளருக்கு உத்தரவிட்டனர்.
credit ns7.tv

Related Posts:

  • இறைதூதர் தலைவர் கருணாநிதி அறிவிப்பு கடந்த மார்ச் 28ம் தேதி சேலம் கோட்டை மைதாணத்தில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் திமுக நூல் வெளியீட்டுக் குழு உறுப்பினர் நாகை நாகராஜன் … Read More
  • காணவில்லை இந்தபோட்டாவில் உள்ளவர் எனது அருமை நண்பர் ஒரத்தநாட்டை சார்ந்த ஜகுபர்அலியின் தாயாராவார் (பெயர்.நூர்ஜஹான் வயது 55)கடந்த 30/3/2016 முதல் காணவில்லை இவர… Read More
  • சாப்பிட்ட உடன் செய்யக்கூடாதவை சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால், அது சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப் பெரிய கெடுதலை விளைவிக்கும். சாப்பிட்டவுடனேயே பழங்களை… Read More
  • சவுதி மன்னருக்கு எதிராக ஃபத்வா கொடுக்க முன்வருமா? பிரதமர் மோடிக்கு சவுதியின் உயரிய விருதாம்.. இஷ்ரத் ஜெஹான், பில்கிஸ் மற்றும் கவ்சர், 2002 கோத்ரா, அப்பாவி அஃக்லக் மற்றும் இன்னும் பல பட… Read More
  • சாடிலைட் செயலிழப்பு திருநள்ளாறுக்கு அருகில் சாடிலைட் செயலிழப்பு பார்ப்பணர்களின் புருடா அம்பலப்படுத்துகிறார் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை (function(d, s, id) { var… Read More