Home »
» கொரோனா வைரஸ் பாதிப்பை மத்திய அரசு பொருட்படுத்தவில்லை” -ராகுல் காந்தி
உலகையே உலுக்கி வரும் கொரொனா வைரஸ் பாதிப்பை மத்திய அரசு பெரிதாக பொருட்படுத்திக் கொள்ளவில்லை என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
கொரொனா வைரஸ் தாக்குதலுக்கு நாள்தோறும் சீனாவில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஹாங்காங்கில் இருந்து 3711 பயணிகளுடன் ஜப்பான் சென்ற டைமன்ட் பிரின்சஸ் என்ற சொகுசு கப்பலை அந்நாட்டு அரசு கரையில் நிறுத்தி வைத்துள்ளது. கொரோனா பாதிப்பு எதிரொலியால் அதில் உள்ள பயணிகள், கப்பலிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். பயணிகளுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 2 இந்தியர்கள் உள்பட 174 பேருக்கு இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உலகிற்கே மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ள கொரோனா வைரஸ் தாக்குதலை மத்திய அரசு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி டிவிட்டரில் குற்றம்சாட்டியுள்ளார். கொரோனா வைரஸ் மக்களுக்கும் பொருளாதாரத்திற்கும் மிகப்பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
credit ns7.tv
Related Posts:
30 பேர் மீது 20 மணிநேரம் கொடூர தாக்குதல் நடத்திய வனத்துறை! February 15, 2018
கொடைக்கானலில், சுற்றுலா சென்றவர்களை, வனத்துறையினர் கொடூரமாக தாக்கியதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மன்னவனூருக்கு கொடைக்கானல் தனியார் விடுதியி… Read More
காவிரியில் தமிழகத்திற்கான நீர் பங்கீட்டை குறைத்தது உச்சநீதிமன்றம் February 16, 2018
காவிரி வழக்கில் தமிழகத்திற்கான நீரின் அளவை குறைத்து உச்சநீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, காவிரியில் தமிழகத்திற்கு 177.… Read More
மின்வாரிய ஊழியர்கள் இன்றுமுதல் வேலைநிறுத்தப் போராட்டம்! February 16, 2018
மின்வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்தம் திட்டமிட்டபடி இன்று நடைபெறும் என சிஐடியூ தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு… Read More
காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு மீதான வழக்கு கடந்து வந்த பாதை..! February 16, 2018
காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் இறுதி இறுதித்தீர்ப்பு வழங்கும் நிலையில், இந்த வழக்கு கடந்து வந்த பாதை குறித்த சில தகவல்கள்.காவிரி நீர் பங்கீடு தொடர… Read More
தமிழக கர்நாடக எல்லைப் பகுதிகளில் பதற்றம்..! February 16, 2018
தமிழகத்திற்கு காவிரியிலிருந்து 177.25 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே ஒதுக்கப்பட்டதால் தமிழக கர்நாடக எல்லை பகுதியில் பதற்றம் நிலவிவருகிறது. காவிரிய… Read More