வெள்ளி, 28 பிப்ரவரி, 2020

அரசு ஊழியர்கள் கட்டாயம் அடையாள அட்டையை அணிய வேண்டும்: தமிழக அரசு

Image
அரசு ஊழியர்கள் பணிநேரத்தின்போது, கட்டாயம் அடையாள அட்டையை அணிய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

தமிழக அரசின் பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறையின் முதன்மைச் செயலாளர் ஸ்வர்ணா, அனைத்துத்துறை முதன்மை செயலாளருக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், உயர்நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி, இனி அரசுப் பணியாளர்கள் அனைவரும் கட்டாயமாக அடையாள அட்டை அணிய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

பெரும்பாலான அரசு அலுவலர்கள், பணிநேரத்தின்போது அடையாள அட்டை அணிவதில்லை என்ற புகார் தொடந்து வருவதாகவும், அது போன்ற புகார் வரும் பட்சத்தில் அவர்கள் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை முதன்மைச் செயலாளர் ஸ்வர்ணா உத்தரவிட்டுள்ளார். அடையாள அட்டை அணிவது தொடர்பாக, துறை செயலாளர்களும், மாவட்ட ஆட்சியர்களும் கண்காணிக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
credit ns7.tv

Related Posts:

  • துஆக்கள தொழுகைக்காக தக்பீர் கூறி கைகளைக் கட்டியவுடன் நபியவர்கள் ஓதிய துஆக்களையும் அதன் பொருளையும்த காண்போம். அல்லாஹும்ம பாஇத் பைனீ அல்லாஹும்ம பாஇத் பைனீ வபை… Read More
  • ஆட்டம் காண வைக்கும் ஆதாரங்கள் கிறித்தவ பாதிரிகளை ஆட்டம் காண வைக்கும் ஆதாரங்கள் :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிறித்தவ பாதிரிகளிடமும், போதகர்களிடமும்விவாதம் செய்து அடுக்கடுக்கான ஆதார… Read More
  • முகஸ்துதிக்காக அமல் செய்தவர்கள் நிலை நாம் எந்தவொரு நற்காரியத்தைச் செய்வதாக இருந்தாலும் அதை அல்லாஹ்அங்கீகரித்து அழகிய கூலியைத் தரவேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்பட வேண்டும். அதைவிடுத்து, அட… Read More
  • எச்சரிக்கை மருந்து மாத்திரை விற்பனைக்காகத் தொலைக்காட்சிகளில் இரவு 10 மணிக்குப் பிறகு வெளியாகும் விளம்பரங்கள் தொடர்பாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மர… Read More
  • கஞ்சத்தனம் கஞ்சத்தனம் செய்பவர்களின் நிலை:ஏக இறைவன் செல்வத்தின் மூலமும் நம்மைச் சோதிப்பான்.எனவே செல்வந்தர்களாக இருப்பவர்கள் தங்களதுசெல்வத்தில் இருந்து கொஞ்சமாவது… Read More