திங்கள், 24 பிப்ரவரி, 2020

காஷ்மீரில் வீட்டுக் காவலில் உள்ள அரசியல் தலைவர்கள்

காஷ்மீரில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஃபரூக் அப்துல்லா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் விரைவில் விடுதலை பெறுவதற்கு தான் பிரார்த்திப்பதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு, மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட, அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி உள்பட ஏராளமான தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். அண்மையில் உமர் அப்துல்லாவின் புகைப்படம் ஒன்று வெளியாகி காஷ்மீர் நிலைமையை வெளிக்காட்டியது. 
Kashmir House arrest
வீட்டுக்காவல் வைக்கப்பட்டு 6 மாதங்கள் கடந்த நிலையில் காஷ்மீர் தலைவர்கள் விரைவில் விடுதலையாக பிரார்த்திப்பதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். விடுதலையான பின்னர் அவர்கள் மாநிலத்தின் அமைதிக்காக பாடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டார். 
காஷ்மீரில் அமைதி நிலவுவதாகவும், நிலைமை மேம்பட்டு வருவதாகக்  கூறிய ராஜ்நாத் சிங், மத்திய அரசு யாரையும் துன்புறுத்தவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

credit ns7.tv

Related Posts:

  • காணவில்லை. அவசியம் பகிருங்கள்.... காணவில்லை..!!! காணவில்லை..!! நேற்று மாலை முதல் இந்த படத்தில் இருக்கும் இந்த சிறுவன் காணவில்லை. பெயர் சுலைமான்வேலூர் மா… Read More
  • அலுமினிய ஏணி எப்படி தயாரிப்பது ?? அலுமினிய ஏணி எப்படி தயாரிப்பது ?? சேலம்:தற்போது சந்தைக்கு அதிகம் வரத் தொடங்கியுள்ள புது வகை ஏணிகள், பாதுகாப்பு அளிப்பதோடு, பெண்களும் சுலபமாக பயன்ப… Read More
  • ‘வாய் துர்நாற்றமா..?’ பயம் வேண்டாம்! தினமும் காலையில் பல் துலக்குவதற்கு முன் நல்லெண்ணெய்யால் வாயை நன்றாகக் கொப்பளியுங்கள், உங்கள் வாயிலிருந்து வரும் துர்நாற்றம் சுத்தமாக இல்லாமல்… Read More
  • கெய்ல் நிறுவனத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி. திமுக + காங் .அரசின் அடுத்த துரோகம் அம்பலம் . . . :.--கடந்த மைனாரிட்டி திமுக அரசில்GAIL கெய்ல் நிறுவனம்விளைநிலங்கள் வழியாக குழாய் பதித்து கேஸ் கொண… Read More
  • பட்டா மாற்றம் செய்வதில் ... ..மூன்று இனைப்புகள் பயன்படுத்தப்படுகிறது........இனைப்பு 1.. ..பட்டா மாற்ற ...ஆவணங்களை ..கி.நி.அ ரிடம் கொடுக்கும் போது,அவர் தரும் ஒப்புகை ரசீது தான… Read More