செவ்வாய், 18 பிப்ரவரி, 2020

மதத்தின் அடிப்படையில் சட்டம் இயற்றுவது தவறு : டிடிவி தினகரன்


Image
குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறாவிட்டால் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக அமமுகவும் போராட்டத்தில் குதிக்கும் என டிடிவி தினகரன் கூறியுள்ளார். 
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் செயல்வீரர்கள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய, டிடிவி.தினகரன் மதத்தின் அடிப்படையில் சட்டம் இயற்றுவது தவறு என்றும் அதனால்தான்  குடியுரிமை சட்டத்தை எதிர்ப்பதாககவும் கூறினார்.  
சென்னை வண்ணாரபேட்டையில் நடைபெற்ற சம்பவம் குறித்த கேள்விக்கு பதிலளித்த டிடிவி தினகரன், பொது அமைதியை பாதுக்காக வேண்டிய அரசு போராட்டத்தை சரியாக கையாளவில்லை என்று குற்றம்சாட்டினார். 18 02 2020
credit ns7.tv