சனி, 15 பிப்ரவரி, 2020

கரூரில் குடிமக்கள் பதிவேடு நடத்த விட மாட்டோம் - ஜோதிமணி எம்.பி அதிரடி

credit ns7.tv
Image
கரூர் நாடாளுமன்ற தொகுதியில் குடிமக்கள் பதிவேடு நடத்த விட மாட்டோம் அப்படி நடந்தால் என் பிணத்தின் மேல் தான் நடத்த முடியும் என்று ஜோதிமணி எம்.பி தெரிவித்துள்ளார்.
கரூரில் தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி ஆகியோர் பொது மக்களிடம் கையெழுத்து பெற்றனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜோதிமணி, நாடாளுமன்றத்தில் பிரதமர் தேசிய குடிமக்கள் பதிவேட்டையும், மக்கள் தொகை பதிவேட்டையும் பேச மறுக்கிறார் என்று கூறினார். மேலும், ரஜினிகாந்த் பேசும் மொழி பாஜக மொழி என்று கூறிய அவர் ரஜினிகாந்த் ஒரு கந்து வட்டிகாரர் அவர் ஒரு பாஜக காரர் என்பது அவரை தவிர மற்ற அனைவருக்கும் தெரியும்; பாஜக கொள்கைக்கு எதிர்ப்பு வரும் போது மட்டுமே அவர் குரல் கொடுப்பார் என்று கூறிய அவர், மக்கள் பிரச்சனைக்கு ரஜினிகாந்த் குரல் கொடுப்பதில்லை என்று குற்றம்சாட்டினார்.
மேலும், கரூர் நாடாளுமன்ற தொகுதியில் குடிமக்கள் பதிவேடு நடத்த விட மாட்டோம்; அப்படி நடந்தால் என் பிணத்தின் மேல் தான் நடத்த முடியும் என்று ஜோதிமணி கூறினார்.