செவ்வாய், 25 பிப்ரவரி, 2020

ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி அறிக்கையை உடனே வெளியிட வேண்டும் - கனிமொழி February 24, 2020

Image
ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி அறிக்கையை உடனே வெளியிட வேண்டும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே ஆசிர்வாதம்புரம் பகுதியில் செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி, தமிழ் நாகரீகத்தை பற்றிய மிக முக்கியமான கண்டுபிடிப்புகள் ஆதிச்சநல்லூரில் இருந்து கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
அகழாய்வு அறிக்கை டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என தெரிவித்தும் இதுவரை வெளியிடாமல் உள்ளதாக குற்றம்சாட்டிய கனிமொழி, ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணிகள் துவங்கும் என அறிவித்து, இதுவரை பணிகள் தொடங்கப்படவில்லை என விமர்சனம் செய்தார். 
credit ns7.tv