வெள்ளி, 21 பிப்ரவரி, 2020

திருப்பூர் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது! February 20, 2020

Image
திருப்பூர் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பெங்களூருவில் இருந்து எர்ணாகுளத்தை நோக்கி கேரள மாநில சொகுசு பேருந்து ஒன்று சேலம் வழியாக சென்று கொண்டிருந்தது. பேருந்து அவிநாசி-திருப்பூர் சந்திப்பு அருகே சென்ற போது, எதிர்திசையில் வந்த கண்டெய்னர் லாரியின் டயர் வெடித்துள்ளது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி, நெடுஞ்சாலை நடுவே உள்ள தடுப்பை தாண்டி சொகுசு பேருந்து மீது பயங்கரமாக மோதியது. இதில் பேருந்தில் பயணம் செய்த 5 பெண்கள் உட்பட 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதில் உயிரிழந்த 15 ஆண்களில் 9 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. எர்ணாகுளத்தை சேர்ந்த கிரீஸ்( GREES) மற்றும் பய்ஜு (BAIJU), திரிச்சூரை சேர்ந்த  இக்னி ரபேல் (IGNI RAPHAEL)  , ஹனீஸ் (HANNISH) மற்றும் முகமது அலி, நிலக்கல்லை சேர்ந்த கிரன் குமார், பாலக்காடை சேர்ந்த சிவகுமார் , ராஜேஷ் மற்றும் ஜிஸ்மன்  ஷாஜூ (JISMON SHAJU) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.  பெண்களில் 5 பேர் உயிரிழந்த நிலையில் பாலக்காட்டை சேர்ந்த ஐஸ்வர்யா மற்றும் ரோஷானா ஆகியோரின் உடல்கள் மட்டும் அடையாளம் காணப்பட்டுள்ளது

credit ns7.tv