செவ்வாய், 18 பிப்ரவரி, 2020

போராட்ட களத்தில் இஸ்லாமிய மணமக்களுக்கு திருமணம்!

Image
சென்னை வண்ணாரப்பேட்டையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்ட களத்தில், இஸ்லாமிய மணமக்களுக்கு திருமணம் நடைபெற்றது. 
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில், போலீசார் தடியடி நடத்தினர். இதனை கண்டித்து அதே பகுதியில் 4வது நாளாக ஐநூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஏற்கனவே திருமணம் நிச்சயிக்கப்பட்டு, கடந்த 4 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சாயின் ஷா - சுமையாவுக்கு இன்று போராட்ட களத்திலேயே திருமணம் நடைபெற்றது. புதுமண தம்பதிக்கு போராட்டக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
credit ns7.tv