Home »
» தடையை மீறி சென்னையில் பேரணி நடத்திய 20 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு! February 20, 2020
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தடையை மீறி சென்னையில் பேரணி நடத்திய 20 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி சட்டப்பேரவையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என இஸ்லாமிய கூட்டமைப்பு அறிவித்தது. இந்தப் போராட்டத்திற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் திட்டமிட்டபடி போராட்டம் நடத்த இஸ்லாமிய அமைப்புகள் முடிவு செய்தன.
அதன்படி சென்னை சேப்பாக்கத்தில் சட்டப்பேரவையை நோக்கி இஸ்லாமியர்கள் பேரணி நடத்தினர். சென்னை கலைவாணர் அரங்கம் அருகே தொடங்கிய பேரணியில், சுமார் 30 ஆயிரம் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். கையில் தேசிய கொடிகளை ஏந்தி பேரணியில் பங்கேற்ற இஸ்லாமியர்கள், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இந்த நிலையில் தடையை மீறி போராட்டம் நடத்தியதாக 20 ஆயிரம் பேர் மீது திருவல்லிக்கேணி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
credit ns7.tv
Related Posts:
கஜா புயல் பாதித்த பகுதிகளில், இன்றுடன் நிறைவடைகிறது மத்திய குழுவின் ஆய்வு! November 26, 2018
கஜா புயல் பாதித்த மாவட்டங்களில், கடந்த இரு நாட்களாக ஆய்வு மேற்கொண்ட மத்திய குழு, இன்று நாகை மாவட்டத்தை பார்வையிட உள்ளது.இன்று காலை, நாகப்பட்டினம் ம… Read More
திமுக கூட்டணியில் நாங்கள் இல்லை; நண்பர்களாகத்தான் இருக்கிறோம் - தொல்.திருமாவளவன் November 25, 2018
திமுக கூட்டணியில் தாங்கள் இல்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். விருதுநகர் வந்த திருமாவளவனை, ம… Read More
ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் விவகாரத்தில் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு! November 26, 2018
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ச… Read More
டெல்டாவை தாக்கிய கஜா; மெரினாவில் கரை ஒதுங்கிய அரிய வகை ஜெல்லி மீன்! November 26, 2018
சென்னை மெரினா கடற்கரையில் அரிய வகை ஜெல்லி மீன் கரை ஒதுங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த சில தினங்களுக்கு முன்னர், வங்கக்கடலில் உருவான… Read More
செவ்வாயில் இன்று தரையிறங்குகிறது நாசாவின் இன்சைட் விண்கலம்! November 26, 2018
ஆறு மாத விண்வெளி பயணத்திற்கு பின்னர், நாசாவின் இன்சைட் விண்கலம் செவ்வாயில் இன்று தரையிறங்குகிறது. செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கான சூழல்… Read More