செவ்வாய், 23 ஏப்ரல், 2024

தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் குட் நியூஸ்

 

தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் குட் நியூஸ் 23 4 24 


தமிழகத்தில் கோடைக் காலம் வருவதற்கு முன்னதாகவே, வெயிலின் வெப்பத் தாக்கம் தொடங்கிவிட்டது. சித்திரை மாதம் கோடையில் வெயில் கொளுத்தி வருகிறது. மாலை 5.30 மணி வரை வெயிலின் தாக்க இருந்து வருகிறது. மாநிலத்தில் வெப்ப அலை வீசி வருவதால் பகலில் வெளியே செல்வது கடினமாக உள்ளது. 

இந்நிலையில், கோடை வெயில் கொளுத்தினாலும், தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை வெளியிட்ட வானிலை அறிக்கையில் கூறியிருப்பதவது: தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (ஏப்ரல் 22) முதல் ஏப்ரல் 28ஆம் தேதி வரை தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

22.04.2024 முதல் 26.04.2024 வரை அதிகபட்ச வெப்பநிலையாக தமிழக உள் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் இயல்பை விட 23° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. 

அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 39-41° செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34-38° செல்சியஸ் இருக்கக்கூடும். 

22.04.2024 முதல் 26.04.2024 வரை: காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-75 % ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-85% ஆகவும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது அசௌகரியம் ஏற்படலாம். 

வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

soource hhttps://tamil.indianexpress.com/tamilnadu/weather-forecast-rain-will-comes-in-southern-districts-of-tamil-nadu-4504934

Related Posts:

  • Nice New Year 2014 இதுபோல் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் தேவையா ? கீழ்காணும் பெண் செத்துப்போகல சனியனுக்கு போதை சமீபத்தில் ஒரு குடிமகள் சைதாப்பேட்டையில் குடித்த… Read More
  • சிறுவன் வாயில் துப்பாக்கி வைத்து இன்ஸ்பெக்டர் மிரட்டியபோது குண்டு பாய்ந்தது! முஸ்லீம் சிறுவன் வாயில் துப்பாக்கி வைத்து இன்ஸ்பெக்டர் மிரட்டியபோது குண்டு பாய்ந்தது!  சென்னை: கோயில் உண்டியலை உடைக்க முயன்றதாக சிறுவனை போலீசா… Read More
  • சச்சார் கமிட்டிப் பரிந்துரையை அமல் சச்சார் கமிட்டிப் பரிந்துரையை அமல் படுத்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி முடிவு..! கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சிறுபான்மையினருக்கு சமஉரிமை வழங்கும் ப… Read More
  • Islam பொதுவாகவே வீண்பேச்சுக்களைத் தவிர்ந்து கொள்ள வேண்டும்; பேசுவதாக இருந்தால் நல்லதைப் பேச வேண்டும் என ‪#‎இஸ்லாம் அறிவுறுத்துகிறது. அதிலும் குறிப்பாக … Read More
  • Pope - கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக மிகப்பெரிய அதிசய நிகழ்வு ஒன்று நடந்துள்ளதாக மேற்கத்திய பத்திரிக்கைகள் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளன. ‪#‎போப் பி… Read More