சனி, 13 ஏப்ரல், 2024

நாடாளுமன்ற தேர்தல் : தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி பிரச்சாரத்தை தொடங்கிய ராகுல்காந்தி

 இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கோவை  செட்டிபாளையத்தில் நடைபெறும் பிரச்சார கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக ராகுல் காந்தி மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றனர்.  இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள ராகுல் காந்தி விமானம் மூலம் கோவை வந்தடைந்தார்.

கோவை விமான நிலையத்தில் இருந்து பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு செல்லும் வழியில் சிங்காநல்லூரிலுள்ள விக்னேஷ்வரா ஸ்வீட்ஸ் கடை அருகே தனது காரை நிறுத்திஒரு கிலோ குலாப் ஜாமூன் மற்றும் அனைத்து இனிப்புகளும் கலந்து ஒரு கிலோ வாங்கினார்.  பின்னர் ராகுல் காந்தி ஊழியர்களை அழைத்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

வேட்பாளர்களை ஆதரித்து பேசும் முன் ராகுல் காந்தி இனிப்புகளை வாங்கி பிரச்சாரத்தை கோவையில் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. தற்போது சமூக வலைதளங்களில்இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

பி.ரஹ்மான் கோவை மாவட்டம்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/indian-national-congress-head-rahul-gandhi-champaign-in-coinbatore-4479827