ஆட்டுகறி கிலோ 400 முதல் 450 வரை விற்பனை செய்யப்படுகிறது. சேலம் இருப்பாலை ரோடு, சூரமங்கலம் போன்ற பகுதியில் சில கடைகளில் ஆட்டு கறி 300 ரூபாய் என போடு போட்டு விற்பனை செய்கின்றனர்.
அவர்கள் பெரும்பாலும் ஆட்டு கறியுடன் நாய்கறி விற்பனை செய்வதாகவும், நோய்வாய்பட்டு இறக்கும் ஆட்டு குட்டிகளை விற்பனை செய்வதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் சேலத்தில் ஒரு கடையில் நாய் வெட்டுவதும், அதை கூறு போடுவதும் விற்பனை செய்யபடுவது போன்ற புகைப்படங்கள் எடுக்கப்பட்டு வலைதளங்களில் பரவி வருகிறது.
இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது பொதுமக்களில் விருப்பம்.