செவ்வாய், 9 மே, 2017

பதற்றத்துடன் நீட் தேர்வு எழுதிய மாணவ மாணவிகள்! May 09, 2017

நீட் தேர்வு மையங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், பதற்றத்துடன் தேர்வு எழுதியதாகப் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.  

நீட் தேர்வின் போது, தேர்வு மையங்களுக்கு மாணவிகள் தோடு, சங்கிலி உள்ளிட்ட நகைகள் அணிந்து வரக்கூடாது, செல்பேசி எடுத்து வரக்கூடாது, மாணவர்கள் அரைக்கைச் சட்டை மட்டுமே அணிந்து வரவேண்டும் என்பன உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 

இதையடுத்துத் தேர்வு மையங்களுக்கு வந்த மாணவிகள் தோடு உள்ளிட்ட நகைகளைக் கழற்றிய பிறகே அனுமதிக்கப்பட்டனர். அதே போல் முழுக்கைச் சட்டை அணிந்து வந்த மாணவர்கள் அரைக்கையாகச் சட்டையை வெட்டி எடுத்த பின்னரே தேர்வெழுத அனுமதிக்கப்பட்டனர். 

நீட் தேர்வின் போது தேர்வு கண்காணிப்பாளர் திடீரெனத் தனது காதில் டார்ச் அடித்ததால் பயந்துவிட்டதாகக் கோவையைச் சேர்ந்த அழகுலட்சுமி என்ற மாணவி தெரிவித்துள்ளார். இதனால் பதற்றத்துடனேயே தேர்வு எழுதும் சூழலுக்குத் தள்ளப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். நியூஸ் 7 தமிழ், கேள்வி நேரம் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய போது அவர் இதனைத் தெரிவித்தார். 

Related Posts: