நாடு முழுவதும் உள்ள விவசாய பிரதிநிதிகளை ஒன்று திரட்டி, வரும் 21-ம் தேதி டெல்லியில் ஆலோசனை நடத்த உள்ளதாக, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் அய்யாக்கண்ணு இன்று சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அய்யாகண்ணு, நீர் நிலைகளை தூர் வார நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் உறுதியளித்துள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும், வரும் 21-ம் தேதி டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார். டெல்லியில் போராட்டம் நடத்திய தன்னை, பாஜகவினர் விமர்சித்து வருவதாகவும், மீண்டும் போராட்டம் நடத்தினால், தன்னை பாகிஸ்தான் தீவிரவாதி என்று கூட விமர்சிப்பார்கள் என்றும் அய்யாக்கண்ணு குறிப்பிட்டார்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் அய்யாக்கண்ணு இன்று சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அய்யாகண்ணு, நீர் நிலைகளை தூர் வார நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் உறுதியளித்துள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும், வரும் 21-ம் தேதி டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார். டெல்லியில் போராட்டம் நடத்திய தன்னை, பாஜகவினர் விமர்சித்து வருவதாகவும், மீண்டும் போராட்டம் நடத்தினால், தன்னை பாகிஸ்தான் தீவிரவாதி என்று கூட விமர்சிப்பார்கள் என்றும் அய்யாக்கண்ணு குறிப்பிட்டார்.