புதன், 30 ஆகஸ்ட், 2017

​​உ.பி-யில் மீண்டும் ஒரு மருத்துவ பயங்கரம் - 48 மணிநேரத்தில் 42 குழந்தைகள் மரணம்! August 30, 2017

​​உ.பி-யில் மீண்டும் ஒரு மருத்துவ பயங்கரம் - 48 மணிநேரத்தில் 42 குழந்தைகள் மரணம்!



உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர், பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 48 மணிநேரத்தில் 42 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

கோரக்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒரே வாரத்தில் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கடந்த 48 மணிநேரத்தில் மேலும் 42 குழந்தைகள் பரிதாபமான முறையில் பலியாகி உள்ளதாக தெரிகிறது.

இதில் 7 குழந்தைகள் மூளை அலர்ஜி காரணமாகவும் மற்றவர்கள் மற்ற காரணங்களுக்காகவும் பலியாகியுள்ளதாக கோரக்பூர் பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் பி.கே.சிங் தெரிவித்துள்ளார். கோரக்பூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தொடர்ந்து பச்சிளம் குழந்தைகள் பலியாகி வருவது அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.