புதன், 30 ஆகஸ்ட், 2017

மாநிலத் தலைமையின் முக்கிய அறிவிப்பு

மாநிலத் தலைமையின் முக்கிய அறிவிப்பு
( அதிகமாக பகிருங்கள் )
கொள்கைச் சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
பீஜேக்கு எதிராக பரப்பப்படும் ஆடியோ குறித்து ஆதாரங்களுடன் அணுகுமாறு பத்து நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஜமாஅத் இது குறித்து தக்க முடிவை அறிவித்த பின்னர் அனைத்து கொள்கைச் சகோதரர்களும் அந்தக் கெடு முடியும் வரை அமைதி காத்திருக்க வேண்டும். அல்லது அறிவுப்பூர்வமான வாதங்களை வைப்பதுடன் நிறுத்தி கொண்டிருக்க வேண்டும். நமது அறிவிப்பில் இதை தெளிவாக நாம் குறிப்பிடவும் செய்திருந்தோம்.
இருந்த போதும் ஆர்வமிகுதியால் நம் சகோதரர்கள் தரக்குறைவான பதிவுகள் போடுவது, அவர்கள் வழியில் மிமிக்ரி வெளியிடுவது, எதிரிகளின் மனைவி மக்களை இழுத்து பேசுவது போன்றவைகள் மார்க்க அடிப்படையிலும் ஜமாஅத்தின் கொள்கை அடிப்படையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத காரியங்களாகும்.
இது போன்ற செயல்களைக் கைவிட்டுவிட்டு மார்க்கம் அனுமதிக்காத பதிவுகளைப் போட்டவர்கள் உடனடியாக அவற்றை அழித்து விட வேண்டும். மீறுவோர் மீது தலைமை நடவடிக்கை எடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் நாம் வழங்கியுள்ள காலக்கெடுவுக்குள் நிரூபிக்க எவரும் வரவில்லையென்றால், அதன் பின் இஸ்லாத்தின் பார்வையில் நாம் இந்த விவாகாரத்தை கையாண்டது சரிதானா என்பதை விளக்கும் விதமான முழு வீடியோ தொகுப்பு இன்ஷா அல்லாஹ் வெளியிடப்படும்.
இந்த குற்றச்சாட்டை முன் வைத்து எதிரிகள் முன் வைக்கும் அறிவுப்பூர்வமான கேள்விகள் இருப்பின் அது குறித்தும் விளக்கங்களை அளிக்க உள்ளோம்.
ஒரு வேளை இஸ்லாத்தின் பார்வையில் இது போன்ற புகாருக்கும் குற்றம் சாட்டப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இருந்தால், பீஜேவின் மீது நடவடிக்கை பாயும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்படிக்கு
M.முஹம்மது யூசுஃப்
பொதுச் செயலாளர் #TNTJ