சனி, 26 ஆகஸ்ட், 2017

​இடிக்கப்பட்ட பாலத்திற்கு பதிலாக சாலை அமைக்காததால் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்..!! August 25, 2017

​இடிக்கப்பட்ட பாலத்திற்கு பதிலாக சாலை அமைக்காததால் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்..!!


திருவாரூர் அருகே இடிக்கப்பட்ட பாலத்திற்கு பதிலாக சாலை அமைக்காதற்கு கண்டனம் தெரிவித்து அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

திருவாரூர் அடுத்த பெரும்புகளுர் கிராமத்தில் இளவங்கார்குடி - பெரும்புகளுர் இணைப்பு பாலம் முற்றிலும் சேதமடைந்தது. இதனையடுத்து அந்த பாலம் இடிக்கப்பட்டு புதிய பாலம் கட்டும் பணிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டுள்ளது. 

எனினும், இடிக்கப்பட்ட பாலத்திற்கு பதிலாக மாற்று பாதையில்லாமல் சேற்றிலும் சகதியிலும் இறங்கி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது பற்றி அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. 

இதையடுத்து, பெரும்புகளுர் கிராம மக்கள் மாற்று சாலை அமைக்க வலியுறுத்தி தாலவாயக்கால் என்ற இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.