சனி, 26 ஆகஸ்ட், 2017

​திரையரங்கிற்குள் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்ட கள்ளத் துப்பாக்கி விற்பனை கும்பலின் தலைவன்..!! August 26, 2017

​திரையரங்கிற்குள் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்ட கள்ளத் துப்பாக்கி விற்பனை கும்பலின் தலைவன்..!!


கள்ள துப்பாக்கி விநியோகம் செய்து வந்த கும்பலின் தலைவனை திரையரங்கில் தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள தங்கும் விடுதியில், கடந்த 8 ஆம் தேதி இரவு துப்பாக்கியுடன் தங்கியிருந்த 4 பேரை போலிசார் கைது செய்தனர். 

அவர்களிடமிருந்து துப்பாக்கியும், 7 குண்டுகளும், 2 குண்டுகள் பொருத்தும் பெட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடம் விசாரணை நடத்திய போது, அவர்கள் கள்ளத் துப்பாக்கி விநியோகம் செய்து வந்தது தெரிய வந்தது. 

மேலும் இந்த கும்பலுக்கு சென்னை புளியந்தோப்பு குருசாமி தெருவைச் சேர்ந்த அர்ஜுன் என்பவர் தான் தலைவன் என தெரியவந்தது. 

இதனையடுத்து அண்ணாசாலையில் உள்ள திரையரங்கில் நேற்று முன்தினம் வெளியான விவேகம் திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருக்கும்போது அங்கு அதிரடியாக நுழைந்த போலீசார், அர்ஜுனை சுற்றி வளைத்து கைது செய்தனர்.