புதன், 30 ஆகஸ்ட், 2017

நாளை மறுநாள் முதல் அசல் ஓட்டுநர் உரிமம் இல்லாவிட்டால் 3 மாதம் சிறை! August 30, 2017

நாளை மறுநாள் முதல் அசல் ஓட்டுநர் உரிமம் இல்லாவிட்டால் 3 மாதம் சிறை!


அசல் ஓட்டுநர் உரிமம் இல்லாவிட்டால் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை எச்சரித்துள்ளது. 

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், நாளை மறுநாள் முதல் வாகன ஓட்டிகள் அசல் உரிமம் வைத்திருக்காவிட்டால் 3 மாதம் சிறை தண்டைன அல்லது 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சீருடை அணிந்த எந்த காவல்துறை அதிகாரியும் வாகன ஓட்டுநர்களின் அசல் உரிமத்தை கேட்கும் போது காட்ட வேண்டும் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.