சனி, 26 ஆகஸ்ட், 2017

முக்கிய அறிவிப்பு* *தயாராகி_விட்டீர்களா* ? நிரூபிக்க அழைக்கிறோம்!

*
கடந்த சில நாட்களாக ஒரு பெண்ணுடன் சகோதரர் பீஜே அவர்கள் தொலைபேசியில் உரையாடுவது போலவும், அந்த உரையாடலில் மார்க்கம் தடுத்த ஆபாச பேச்சுக்கள் பேசப்பட்டிருப்பது போலவும் சகோதரர் பீஜே அவர்களின் குரல் போல அந்த உரையாடல் வடிவமைக்கப்பட்டு ஏகத்துவ எதிரிகளால் அது பரப்பப்பட்டு வருகின்றது.
பொதுவாக சகோதரர் பீஜே அவர்களின் 30 ஆண்டுகால ஏகத்துவப் பிரச்சார வரலாற்றில் அவர் மீது சொல்லப்படாத அவதூறுகளே இல்லை என்னும் அளவிற்கு இதுவரைக்கும் அவதூறுகளை ஏகத்துவ எதிரிகள் பரப்பி வந்துள்ளனர்; இன்னும் பரப்பியும் வருகின்றனர்.
இதை பரப்பி வருபவர்கள் தமது குற்றச்சாட்டை நிரூபிக்க வருமாறு இதைப் பரப்பியவரகளை அழைக்கிறோம்.
தொலைபேசி உரையாடல் என்ற பெயரில் தான் இது பரப்பப்படுகிறது.
தொலைபேசி உரையாடல் என்றால்
எந்த நம்பரில் இருந்து போன் செய்யப்பட்டது?
அது யாருடையது?
எந்த நம்பருக்கு போன் செய்யப்பட்டது? அவர் யார்?
எந்த தேதியில் பேசப்பட்டது?
கால் ஹிஸ்டரி எனும் சம்மரி ஆதாரத்துடன்
சம்மந்தப்பட்ட பெண்ணை அழைத்து வந்து நிரூபிக்க முன் வாருங்கள்!
ஆதாரங்களை நேரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் கொண்டு வந்து சமர்ப்பித்தால் அதை உரிய வகையில் விசாரித்து குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுமேயானால் பீஜே மீது நடவடிக்கை எடுத்து அவரை இந்த ஜமாஅத்தின் பிரச்சாரகர் உள்ளிட்ட அனைத்து நிலைகளில் இருந்தும் தூக்கி எறிய இந்த ஜமாஅத் தயாராக உள்ளது என்பதை அறிவிக்கின்றோம்.
தவ்ஹீத் ஜமாஅத்தின் விசாரணையை யாரும் சந்தேகிக்க தேவையில்லை.
எவ்வளவு பெரிய பொறுப்பில் யார் இருந்தாலும் அவர்கள் குற்றம் செய்தது நிரூபிக்கப்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்த ஜமாஅத் துளியளவும் தயக்கம் காட்டாது.
என் மகள் ஃபாத்திமா திருடினாலும் அவளது கையை வெட்டுவேன் என்ற நபிகளாரின் வழி வந்த தவ்ஹீத் ஜமாஅத்தில் எளியவன் - வலியவன் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது.
எனவே பீஜே அவர்கள் மீதான அவதூறை பரப்புவோர் யாராக இருந்தாலும் அதை நான் நிரூபிக்கப் பொறுப்பேற்றுக் கொள்கின்றேன் என்ற உத்தரவாதத்தோடு வரக்கூடிய 03.09.17 திங்கட் கிழமைக்குள் தக்க ஆதாரங்களுடன் நான் நிரூபிக்கத்தயார் என்று சொல்லி நிரூபிக்க முன்வரட்டும்.
இதற்கு இடைப்பட்ட நாட்களுக்குள் ஏதேனும் ஒரு தேதியை அவர்கள் தேர்ந்தெடுத்தால் அந்த தேதிக்கு ஒரு நாளைக்கு முன்னதாக எந்த நாளில் எந்த நேரத்தில் தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைமையகத்திற்கு அதற்கான ஆதாரங்களுடன் தாங்கள் வருகின்றோம் என்பதை அவர்கள் முன்கூட்டியே எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும்.
அவ்வாறு தெரிவிப்பார்களேயானால் அந்த குறிப்பிட்ட நாளில் அவர்கள் கொண்டு வரும் ஆதாரங்களுடன், குற்றம் சுமத்தப்பட்ட சகோதரர் பீஜே அவர்களையும் நேரில் வைத்து இந்த விசாரணையை தவ்ஹீத் ஜமாஅத் நடத்த தயாராக உள்ளது.
இந்த குற்றச்சாட்டை நிரூபிக்க யாரேனும் பொறுப்பேற்றுக் கொண்டு முன் வந்தால் அந்த விசாரணைக்கு உடன்படுவதற்கு தான் தயார் என்றும், எப்படி வேண்டுமானாலும் என்னை விசாரிக்கலாம் என்றும் சகோதரர் பீஜே அவர்கள் கூறியுள்ளார்.
இந்த
குற்றச்சாட்டை நிரூபிக்க பொறுப்பேற்று தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைமையகத்திற்கு வருவதற்கு யாருக்கும் எந்த தயக்கமும் தேவையில்லை.
யார் இந்த குற்றச்சாட்டை நிரூபிக்க பொறுப்பேற்று தலைமையகம் வருகின்றாரோ அவர் திரும்பி செல்லும் வரைக்கும்,
அவரது உயிருக்கும், உடமைக்கும் எந்த பாதிப்பும் வராது என்பதற்கும் இந்த அறிவிப்பின் வாயிலாகவே உறுதி கூறுகின்றோம்.
பேஸ்புக்கில் அவதூறு பரப்புவோர் இதை நிரூபிக்க பொறுப்பேற்று நேரில் வர மறுத்தால் இதிலிருந்தே இது பச்சை அவதூறு என்பதும், மிக துல்லியமான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, கைதேர்ந்த தொண்டை தொழிலாளிகளை வைத்து, செய்த செட்டிங் என்றும் மக்கள் அறிந்து கொள்வார்கள்.
கவுண்டவுன் ஸ்டார்ட்.
இன்னும் 10 நாட்களே உள்ளன;
இன்னும் 242 மணி நேரங்களே உள்ளன.
உங்களுக்கு துணிவிருந்தால் இந்த பகிரங்க அறைகூவலை ஏற்க முன்வாருங்கள்!
இப்படிக்கு,
மாநிலப் பொதுச் செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
குறிப்பு
அவதூறு பரப்போவோருக்கு அறிவுப்பூர்வமாக மட்டும் பதில் கொடுங்கள். ஆபாசமாக எதிரிகள் குடும்ப பெண்களை இழிவுபடுத்தும் எந்த பதிவையும் போட வேண்டாம். இதில் ஜமாஅத்துக்கு உடன்பாடு இல்லை என்பதை கொள்கைச் சகோதரர்களுக்கு அறிவித்துக் கொள்கிறோம்