ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2017

​பள்ளி விடுமுறை தினங்களில் வகுப்புக்கள் நடத்தினால் கடும் நடவடிக்கை: கல்வி அமைச்சர்! August 27, 2017

​பள்ளி விடுமுறை தினங்களில் வகுப்புக்கள் நடத்தினால் கடும் நடவடிக்கை: கல்வி அமைச்சர்!


தனியார் பள்ளிகளில் விடுமுறைநாட்களில் வகுப்புநடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கரட்டடிபாளையத்தில் செயல்பட்டுவரும் கோபி கலைக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் கோபி கல்வி மாவட்ட விளையாட்டுப் போட்டிகள் நிறைவு விழா நடைபெற்றது.

இதில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கிய அமைச்சர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது இதைத் தெரிவித்தார்.

மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினிகள், மிதி வண்டிகள் விரைவில் வழங்கப்படும். மேலும்  'சிப்' பொறுத்தப்பட்ட ஸ்மார்ட் கார்டு மாணவர்களுக்கு ஒரு வாரத்தில் வழங்கப்படும்.
இந்த ஸ்மார்ட் கார்டு மூலம் மாணவர்கள் எங்கு செல்கின்றனர் என்பதை ஸ்மார்ட் போன்  மூலம் பெற்றோர்களால் கண்காணிக்க முடியும்" என்றார்.