புதன், 30 ஆகஸ்ட், 2017

தொடரும் குழந்தைகள் மரணம்! August 30, 2017

தொடரும் குழந்தைகள் மரணம்!


உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர், பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 48 மணிநேரத்தில் ஏழு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. 

கோரக்பூரில் உள்ள பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஜூலை மாதம் ஒரே வாரத்தில் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கடந்த 48 மணிநேரத்தில் மேலும் 7 குழந்தைகள் பரிதாபமான முறையில் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் ஒரே வாரத்தில் 70 குழந்தைகள் மரணமடைந்த சம்பவத்தை தொடர்ந்து மீண்டும் ஏழு குழந்தைகள் மரணமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது