ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2017

​ஏ.கே.47 - பெட்ரோல் குண்டு வரை பயன்படுத்திய பலாத்கார சாமியாரின் ஆதரவு படுகொலையாளர்கள்! August 26, 2017

​ஏ.கே.47 - பெட்ரோல் குண்டு வரை பயன்படுத்திய பலாத்கார சாமியாரின் ஆதரவு படுகொலையாளர்கள்!



பலாத்கார சாமியார் குர்மீத் கைதுக்கு எதிராக நேற்று ஹரியானா, பஞ்சாப், டெல்லி பகுதிகளில் மிக்கொடூரமான கலவரம் ஏற்பட்டது. கலவரங்களின் காரணமாக 36 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

பலாத்கார சாமியார் குர்மீத்தின் ஆசிரமமான தேரா சச்சா சவுடாவின் ஆதரவாளர்களிடம் இருந்து ஆயுதங்களை காவல்துறை கைப்பற்றியுள்ளது. அதில், ஒரு ஏ.கே.47 துப்பாக்கி, ஒரு ரிஃபல் துப்பாக்கி, 2500 மர லத்திகள், பெட்ரோல் குண்டுகள், தீவைத்து எரிப்பதற்கான மண்ணெண்னை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் உள்ள பல தேரா ஆசிரம மையங்களில் சோதனைகள் நடைபெற்று வருகிறது.