புதன், 9 ஆகஸ்ட், 2017

சகாயத்திற்கு கொலை மிரட்டல்! பாதுகாப்புக் கோரி நீதிமன்றத்தில் மனு! August 08, 2017

​சகாயத்திற்கு கொலை மிரட்டல்! பாதுகாப்புக் கோரி நீதிமன்றத்தில் மனு!



தமிழகத்தில் நடைபெற்றுள்ள கிரானைட் ஊழல் முறைகேடுகளைக் குறித்து விசாரிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் நியமிக்கப்பட்டார். பல்வேறு கிரானைட் குவாரிகளில் கடைபிடிக்கப்பட்ட கிரானைட் வெட்டும் தொழில் குறித்து விசாரித்து வரும் சகாயம், தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

சகாயத்தின் வழக்கறிஞர் எம்.ராதாகிருஷ்ணன் இதுதொடர்பாக தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வில் இதுகுறித்து முறையிட்டுள்ளார். மேலும், சகாயத்தின் உதவியாளர் சேவற்கொடியனுக்கும் பாதுகாப்பு கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, சகாயத்தின் உதவியாளராக இருந்த பார்த்தசாரதி 2015 ஏப்ரலில் கார் விபத்து ஒன்றில் மரணமடைந்தார். இந்த சாவு குறித்து விரிவான விசாரணை வேண்டும் என்றும் மனு அளிக்கப்பட்டுள்ளது.

மனுக்களை ஆராய்ந்த நீதிபதிகள் பாதுகாப்பு கோரும் மனுக்கள் மீதான விசாரணையை செப்டம்பர் 14ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மேலும், சகாயம் தனது ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க ஆகஸ்ட் 31 வரை காலநீட்டிப்பு செய்துள்ளனர்.

Related Posts:

  • hadis நீண்ட பயணத்தில் ஒருவன் புறப்பட்டு, ஆடைகளும் உடம்பும் புழுதி படிந்த நிலையில், இறைவா! இறைவா! என்று பிரார்த்திக்கிறான். அவனது உடை, உணவு, பானம் ஆகியவை ஹ… Read More
  • பட்டா வாங்குவது மிக அவசியம். சொத்து வாங்கியவுடன் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்தவுடன் வேலை முடிந்துவிட்டது என்று நினைக்கக் கூடாது. பத்திரம் தான் நம் கைக… Read More
  • 21/2 கோடி மிரட்டி நன்கொடையாக வாங்கி இதுயெல்லாம் அதிகம் மக்கள் மத்தில் கொண்டு செல்லவேண்டும். இவர்களிடம் இருந்துதான் தேர்தல் நேரத்தில் 21/2 கோடி மிரட்டி நன்கொடையாக வாங்கி … Read More
  • துருக்கி அமைச்சரை கொல்ல கொலை முய்ற்சி : திவிரவாத அமைப்பான ஐஸ்.ஐஸ்பற்றி துருக்கி அமைச்சர்மேடையில் பேசுகையில் இந்த சம்பவம் நடைபெற்றது.பாதுகாப்பு கவசம் போட்டிருந்ததால் உயிர் தப்பினார். … Read More
  • கலப்பின கலப்பின மீன்களால் அழிந்து வரும் பாரம்பரிய நாட்டு மீன்கள்: ஆவணப்படுத்தும் பணியை தொடங்கியது ‘கயல்’ அமைப்பு … Read More