திங்கள், 10 பிப்ரவரி, 2020

சென்னை விமான நிலையத்தில், செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்

KS
10.02.2020 சென்னை விமான நிலையத்தில், செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக கூட்டணி மேற்கொண்டு வரும் கையெழுத்து இயக்கத்தை, சிலர் தடை செய்யக்கோருவதை கடுமையாக சாடினார். டெல்லி தேர்தல் கருத்து கணிப்புகளை கண்டு, காங்கிரஸ் கட்சி அஞ்சவில்லை எனவும் கே.எஸ். அழகிரி தெரிவித்தார். காவிரி டெல்டா மண்டலம் பகுதியில், அமைக்க வேண்டிய தொழிற்சாலைகள் உள்ளிட்டவை குறித்து முதல்வர் பழனிசாமி எதிர் கட்சிகளுடன் கலந்து பேச வேண்டும் எனவும், காவிரி டெல்டா பகுதியை வேளாண்மை மண்டலமாக அறிவித்த முதலமைச்சர் பேச்சை வரவேற்பதாகவும் கே.எஸ். அழகிரி தெரிவித்தார்.
credit ns7.tv