வெள்ளி, 29 ஜனவரி, 2021

இறுதி உடன்பாடு எட்டப்படும் வரை போராட்டம் தொடரும் – ராகேஷ் டிக்கைட்

பேச்சுவார்த்தையின் மூலம் உடன்பாடு எட்டப்படும் வரை எங்கள்  உள்ளிருப்பு போராட்டத்தைத் தொடருவோம். எக்காரணத்தையும் முன்னிட்டு இடத்தை காலி செய்ய மாட்டோம். குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அரசு நிர்வாகம் நீக்கியுள்ளது. இருப்பினும், கிராமங்களிலிருந்து நாங்கள் குடிநீர் பெறுவோம் என பாரதிய விவசாயிகள் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் டிக்கைட் தெரிவித்தார்.