செவ்வாய், 19 ஜனவரி, 2021

விவசாயிகள் உடனான 10ம் கட்ட பேச்சுவார்த்தையை ஒத்திவைத்தது மத்திய அரசு!

 மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து மத்திய அரசு மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் இடையே 9 கட்ட பேச்சுவார்த்தை இதுவரை நடைபெற்றுள்ளது.

இன்று 10ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அதனை மத்திய அரசு நாளைக்கு ஒத்திவைத்துள்ளது. விக்யான் பவனில் நாளை மதியம் 2 மணிக்கு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

source https://www.news7tamil.live/central-government-postpones-10th-phase-of-talks-with-farmers.html