புதன், 6 ஜனவரி, 2021

பள்ளிகள் திறப்பது குறித்து இன்று முதல் கருத்துக் கேட்புக் கூட்டம் 6 1 2021

  10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்காகப் பள்ளிகளைத் திறப்பது பற்றி இன்று முதல் ஜனவரி 8-ம் தேதி வரை கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், பெற்றோரை அழைத்து கருத்துக் கேட்க வேண்டும். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நாள் ஒன்றுக்கு 100 பெற்றோர்களிடம் எழுத்துப்பூர்வமாகக் கருத்துக் கேட்கத் திட்டமிடப்பட்டுள்ளது எனப் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்திருக்கிறது.