புதன், 8 செப்டம்பர், 2021

பள்ளிகளில் அதிகரிக்கும் கொரோனா; ஆட்சியர்களுடன் இறையன்பு ஆலோசனை

 08 09 2021 பள்ளிகளில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று ஆலோசனை நடத்துகிறார்.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறையத்தொடங்கியதையடுத்து கடந்த 1-ம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்புக்கான பள்ளிகளும், கல்லூரிகளும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சில பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் இறையன்பு இன்று பிற்பகல் 3 மணிக்கு காணொலி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார். பொது இடங்களில் விநாயகர் சதூர்த்தி கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் குறித்தும், வரும் 12-ம் தேதி மட்டும் பத்து லட்சம் தடுப்பூசி செலுத்துவது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

source https://news7tamil.live/iraiyanbu-discuss-with-dist-collector.html


Related Posts:

  • சேப்பாக்கம் கெஸ்ட் ஹவுசில் பரபரப்பு 24 years old cop shoots self to suicide at Chepauk guest house Tamil News : சென்னை சேப்பாக்கம், விருந்தினர் மாளிகை பாதுகாப்புப் பணியிலிருந்… Read More
  • தேசவிரோத சக்திகளுடன் இன்போசிஸ் கூட்டணி ஆர்.எஸ்.எஸ்.-ஐச் சேர்ந்த ‘பாஞ்சஜன்யா’ வார இதழின் சமீபத்திய பதிப்பில், முதல்முறையாக ஒரு முன்னணி நிறுவனத்தை தேச விரோத சக்திகளுடன் இணைந்துள்ளதாக மு… Read More
  • புதினா அழகு என்பது அனைவரும் விரும்பும் ஒன்று. தனது முகம் மற்றும் உடலை அழகாக வைத்துக்கொள்வதற்காக பலரும பலகையான கிரீம் மற்றும் இதர பொருட்களை பயன்படுத்தி … Read More
  • எலக்ட்ரிக் பஸ் திட்டம்; அமைதியாக கைவிடும் தமிழக அரசு! கடந்த ஆண்டு, கனரக தொழில்களுக்கான மத்திய அமைச்சகம் கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு, வேலூர், திருச்சி, விழுப்புரம் மற்றும் தஞ்சாவூர் ஆகிய இடங்களுக்… Read More
  • #JusticeforSabiya #JusticeforSabiyaபத்திரிக்கை அறிக்கை04/09/2021பெண்களின் கற்பையும், உயிரையும் பாதுகாக்க வக்கற்ற அமித்ஷா பதவி விலக வேண்டும்!தேசிய தவ்ஹீத் கூட்டமைப… Read More