சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் புதிய உச்சத்தை அடைந்து ஒரு சவரன் ரூ.52,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் அதிகரித்து வருகிறது. வரலாற்றில் முதல் முறையாக மார்ச் 28-ஆம் தேதி தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 50,000-ஐ தொட்டது. அதன் பிறகு, ஏப்ரல் 3 ஆம் தேதி தங்கத்தின் விலை ரூ.52,000 என்ற புதிய உச்சத்தை அடைந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.52,360-க்கும் விற்பனையான நிலையில், நேற்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.6,510-க்கும், பவுனுக்கு ரூ.280 குறைந்து ரூ.52,080-க்கும் விற்பனையானது.
இந்நிலையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மீண்டும் புதிய உச்சமாக தங்கம் விலை பவுனுக்கு ரூ.840 உயர்ந்து உள்ளது. அதன்படி, ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ரூ.6,615-க்கும், பவுனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.52,920-க்கும் விற்பனையாகிறது.
ஆனால், வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, வெள்ளி கிராமுக்கு 10 காசு குறைந்து ரூ.84.90-க்கும், ஒரு கிலோ ரூ.100 குறைந்து, ரூ.84,900-க்கும் விற்பனையாகிறது. தங்கத்தின் விலை தொடர் ஏற்றத்தை அடைந்து வருகிறது. தங்கத்தின் தொடர் விலையேற்றம் சாமானிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
source https://news7tamil.live/for-the-first-time-in-history-on-a-single-day-rs-840-highest-gold-price-rs-gold-approaching-53000.html