
உச்சநீதிமன்ற நீதிபதிகள் 8 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் 8 ஆண்டுகள் நீதிபதியாக இருந்த கர்ணன் தற்போது கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக உள்ளார். தமிழகத்தை சேர்ந்தவரான இவரை கடந்த ஆண்டு கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்தது உச்சநீதிமன்றம். இந்நிலையில் நீதிபதிகள் சிலர் மீது ஊழல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் கர்ணன். நீதிபதிகளுக்கு எதிராக ஊழல் புகார் கூறியதற்காக, உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து கர்ணன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்தது. மேலும்,நீதிபதி கர்ணனுக்கு மனநல பரிசோதனை செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி கர்ணன், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உட்பட 8 நீதிபதிகளுக்கு வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர்களுக்கு மனநல பரிசோதனை நடத்தவும், நீதிபதி கர்ணன் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் 8 ஆண்டுகள் நீதிபதியாக இருந்த கர்ணன் தற்போது கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக உள்ளார். தமிழகத்தை சேர்ந்தவரான இவரை கடந்த ஆண்டு கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்தது உச்சநீதிமன்றம். இந்நிலையில் நீதிபதிகள் சிலர் மீது ஊழல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் கர்ணன். நீதிபதிகளுக்கு எதிராக ஊழல் புகார் கூறியதற்காக, உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து கர்ணன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்தது. மேலும்,நீதிபதி கர்ணனுக்கு மனநல பரிசோதனை செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி கர்ணன், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உட்பட 8 நீதிபதிகளுக்கு வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர்களுக்கு மனநல பரிசோதனை நடத்தவும், நீதிபதி கர்ணன் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.