திங்கள், 8 மே, 2017

லாலு பிரசாத் மீதான மாட்டு தீவன வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு May 08, 2017

லாலு பிரசாத் மீதான மாட்டு தீவன வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு


மாட்டுத் தீவன ஊழல் வழக்கில், பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் மீதான குற்றச்சாட்டுகளை மீண்டும் விசாரித்து, 9 மாதங்களில் விசாரணையை முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த 1990 முதல் 1997ம் ஆண்டு வரை பீகார் முதல்வராக லாலு பிரசாத் பதவி வகித்த போது, மாட்டுத் தீவனம் வாங்கியதில் சுமார் 950 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக சிபிஐ தரப்பில் 64 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் லாலு பிரசாத் மீது மட்டும் 5 வழக்குகள் தொடரப்பட்டன. 

இதனை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 2013-ல் லாலு பிரசாத் குற்றவாளி என தீர்ப்பளித்தது. மேலும் ஒரு வழக்கில் மட்டும் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதனிடையே, லாலு பிரசாத் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை கைவிடுவதாக ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் அறிவித்தது. 

இதனை எதிர்த்து, சி.பி.ஐ. தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், லாலு மீதான குற்றச்சாட்டுகளை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. உடனடியாக முறையீடு செய்யாதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.

Related Posts: