
விவசாயிகள் நலனுக்கான திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பது தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் விவசாயிகளின் தற்கொலையை தடுக்கக் கோரி தமிழக பொதுநல வழக்காடு மன்றம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, நீதிபதிகள் தீபக் மிஷ்ரா, ஏ எம் கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் கொள்முதல் நிலையங்கள் தொடர்பாக தமிழகத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்திற்கு உதவும் வகையில் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் சங்கர நாராயணன், குறைந்தபட்ச ஆதார விலை, கொள்முதல் நிலையங்களை சிறப்பாக செயல்படுத்தும் வகையில் சில பரிந்துரைகளை அளித்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் இந்த பரிந்துரைகளை செயல்படுத்து தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கினை ஜூலை மாதத்திற்கு ஒத்திவைத்தது.
இதனிடையே வறட்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடு வழங்கப்படவில்லை என அய்யாக்கண்ணு தரப்பு வழக்கறிஞர் ராஜாராம் தெரிவித்தார். இதுதொடர்பாக தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நரசிம்மா, இதற்கு மறுப்புத் தெரிவித்தார்.
இதையடுத்து, அய்யாக்கண்ணு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்வதாக தெரிவித்த நீதிபதிகள், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை எனும் பட்சத்தில், சென்னை உயர்நீதிமன்றத்தை அவர்கள் அணுகலாம் எனத் தெரிவித்தனர்.
தமிழகத்தில் விவசாயிகளின் தற்கொலையை தடுக்கக் கோரி தமிழக பொதுநல வழக்காடு மன்றம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, நீதிபதிகள் தீபக் மிஷ்ரா, ஏ எம் கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் கொள்முதல் நிலையங்கள் தொடர்பாக தமிழகத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்திற்கு உதவும் வகையில் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் சங்கர நாராயணன், குறைந்தபட்ச ஆதார விலை, கொள்முதல் நிலையங்களை சிறப்பாக செயல்படுத்தும் வகையில் சில பரிந்துரைகளை அளித்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் இந்த பரிந்துரைகளை செயல்படுத்து தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கினை ஜூலை மாதத்திற்கு ஒத்திவைத்தது.
இதனிடையே வறட்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடு வழங்கப்படவில்லை என அய்யாக்கண்ணு தரப்பு வழக்கறிஞர் ராஜாராம் தெரிவித்தார். இதுதொடர்பாக தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நரசிம்மா, இதற்கு மறுப்புத் தெரிவித்தார்.
இதையடுத்து, அய்யாக்கண்ணு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்வதாக தெரிவித்த நீதிபதிகள், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை எனும் பட்சத்தில், சென்னை உயர்நீதிமன்றத்தை அவர்கள் அணுகலாம் எனத் தெரிவித்தனர்.