திங்கள், 8 மே, 2017

நீட் தேர்வில் சட்டை கிழிக்கப்பட்டதற்கு விசிக கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் கண்டனம்! May 08, 2017




நீட் தேர்வு எழுத சென்ற மாணவர்களின் சட்டை கிழிக்கப்பட்டது போன்ற கடும் விதிமுறைகளை கடைப்பிடிக்கபட்ட சம்பவத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்று வரும் மண்பாண்ட தொழிலாளர்களின் உண்ணாவிரத போராட்டத்தில் முத்தரசன் மற்றும் திருமாவளவன் ஆகியோர் பங்கேற்று ஆதரவு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன், முதுநிலை மருத்துவ இடஒதுக்கீட்டிற்காக போராடுபவர்களை மாவோயிஸ்டுகள் எனக்கூறிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜனுக்கு கண்டனம் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், நீட் தேர்வில் மாணவர்களை அவமானப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.